அப்படி அதிரடியாக ஆடும் போது எங்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைத்தது. தற்போது அதிரடியாக ஆடுவதற்கு இந்தியாவை தவிர ஏற்ற வேறு நாடு ஏதேனும் இருக்கிறதா? நாங்கள் இந்தியாவில் விளையாடும் போது உலகம் முழுவதும் பல ரசிகர்கள் இந்த போட்டியை பார்ப்பார்கள். இது நிச்சயம் எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஆகும். இந்தியா என்பது வாய்ப்புகளின் பூமியாகும். இந்த வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பது உற்சாகத்தையும் கொடுக்கிறது. இந்த போட்டி எத்தனை நாள் நடைபெறும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இரு அணிகளும் தங்களுக்கு உரிய ஸ்டைலில் விளையாடுவார்கள்.
எப்படி ஆசஸ் தொடர் இரு பலம் வாய்ந்த அணிகளுக்கு இடையே நடந்த போட்டியாக இருந்ததோ, அதேபோல் இந்த தொடரும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியாவின் 20 விக்கெட்டுகளை நாங்கள் ஒவ்வொரு டெஸ்டிலும் வீழ்த்த வேண்டும். இந்தியாவை விட ஒரு ரன் கூடுதலாக பேட்டிங் அடிக்க வேண்டும். இது ஒன்றும் ராக்கெட் தொழில்நுட்பம் இல்லை. இதுதான் போட்டியின் வெற்றி அம்சமே. இந்தத் தொடர் எங்களுக்கு கடும் சவால்களை கொடுக்கும். எங்களுடைய யுத்தி இந்த தொடரில் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்படும். இதனால் தான் இந்த தொடர் எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது’’ என்றார்.
The post இந்தியாவுடனான டெஸ்ட் தொடர் கடும் சவால்களை கொடுக்கும்: இங்கி. பயிற்சியாளர் மெக்குல்லம் சொல்கிறார் appeared first on Dinakaran.