திமுக பிரமுகர் மறைவு முதல்வர் இரங்கல்

சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல்: திமுகவின் மூத்த உடன்பிறப்புகளில் ஒருவரும், திமுகவின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு வந்தவருமான கம்பம் சீமான் பாலுச்சாமி மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். மொழிப்போர் தியாகி தேவேந்திரனின் இளவலான சீமான் பாலுச்சாமி, 2006 பேரவைத் தேர்தலில், ஆண்டிப்பட்டி தொகுதியில் திமுக வேட்பாளராகக் களம் கண்டவர். கொள்கை பிடிப்போடு கட்சி பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட அவரது மறைவு, திமுகவிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் கட்சியினருக்கும், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post திமுக பிரமுகர் மறைவு முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: