இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரரான பூலித்தேவனுக்கு தபால்தலை வெளியிட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து ஒன்றிய அரசுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி மனு அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பூலித்தேவனுக்கு தபால்தலை வௌியிடுமாறு ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது அரசின் செயல்பாடுக்கு உட்பட்டது. இதில் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. உரிய அதிகாரிகளை மனுதாரர் அணுகலாம் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
The post நாட்டின் முதல் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனுக்கு தபால்தலை வெளியிட உத்தரவிட முடியாது: அரசை அணுகுமாறு மனுதாரருக்கு ஐகோர்ட் அறிவுரை appeared first on Dinakaran.