சட்ட விழிப்புணர்வு ஆலோசனை முகாம்

பாப்பாரப்பட்டி: பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த ஜக்கம்பட்டி கிராமத்தில், பென்னாகரம் வட்டச் சட்டப் பணிகள் குழு மற்றும் ஏரி யூர் வைகை தொண்டுநிறுவனம் இணைந்து, சட்ட விழிப்புணர்வு முகாம் ஜக்கம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. பென்னாகரம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிபதி, நாகலட்சுமி தலைமை ஏற்று முகாமினை தொடங்கி வைத்தார். வழக்கறிஞர் தேவேந்திரன், தற்போது உள்ள சட்டங்கள், முன்பு இருந்த சட்ட திட்டங்களையும் பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பென்னாகரம் சட்ட தன்னார்வலர் சிவக்குமார், ஏரியூர் வைகை தொண்டு நிறுவன இயக்குனர் குமரேசன் ஒருங்கிணைப்பாளர் சஞ்சய்நாத் ஆகியோர் கலந்து கொண்டனர். இம்முகாமில், மக்கள் எவ்வாறு நீதிமன்றத்தை நாடுவது, குறைகளை தீர்ப்பது என்பது பற்றி மக்களிடையே கலந்துரையாடினர். தன்னார்வலர் சிவக்குமார் நன்றி கூறினார்.

The post சட்ட விழிப்புணர்வு ஆலோசனை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: