கிராமங்களுக்கு செல்வோம் பாஜவின் புதிய திட்டம் பிப்4ல் தொடக்கம்

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் கிராமங்களுக்கு செல்வோம் என்ற புதிய திட்டத்தை பிப்ரவரி 4ம் தேதி முதல் தொடங்க பாஜ திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் நேற்று பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடந்த கூட்டத்தில், “பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியின் மக்கள் நல திட்டங்கள், சாதனைகளை கிராமங்களில் உள்ள கடைசி மனிதர் வரை எடுத்து சொல்லும் விதமாக பிப்ரவரி 4 முதல் 11ம் தேதி வரை கிராமங்களுக்கு செல்வோம் திட்டம் நடத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கிராமங்களுக்கு செல்வோம் பாஜவின் புதிய திட்டம் பிப்4ல் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: