கோயில் வளாகம் முழுவதும் நடந்து சென்று பிரதமர் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள ஆண்டாள் யானை மவுத் ஆர்கன் கருவியை வாசித்ததை பிரதமர் மோடி ரசித்துப் பார்த்தார். திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கம்பராமாயண பாராயணத்தை பிரதமர் மோடி கேட்கிறார். ரங்கநாதர் கோயில் மண்டபத்தில் கம்பராமாயண பாராயணத்தில் பாரம்பரிய உடையுடன் பங்கேற்றார். தமிழறிஞர்கள் பாடிவரும் கம்பராமாயண பாராயணத்தை பிரதமர் மோடி மனமுருக கேட்டு வருகிறார். பாதுகாப்பு வளையத்திற்குள் ஸ்ரீரங்கம் கொண்டுவரப்பட்டது. ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தரும் முதல் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
The post ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வேட்டி, சட்டை அணிந்து பிரதமர் மோடி சாமி தரிசனம்; கோயில் யானை ஆண்டாளிடம் ஆசிர்வாதம் பெற்றார்..!! appeared first on Dinakaran.