தென் மாவட்டங்களில் நாளை முதல் 20ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளை லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. மேலும் நாளை முதல் 20ம் தேதி வரை தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் இரவு வேளை உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

The post தென் மாவட்டங்களில் நாளை முதல் 20ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: