இந்த தீவிரவாத தாக்குதலுக்கு இலக்கான அந்த வாகனத்தில் இருந்த ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். அதையடுத்து பாதுகாப்பு படையினர் உடனடியாக பதிலடியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். பலியான ராணுவ வீரர்கள் திப்பு ரசாக், சவுகத், சபி உல்லா, தாரிக் அலி, முகமது தாரிக் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு, வடக்கு வசீரிஸ்தானில் உளவு பிரிவு படையினரின் அதிரடி நடவடிக்கையில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பாக். ராணுவ வீரர்கள் பலி appeared first on Dinakaran.