சுற்றுலா பொங்கல் கொண்டாட்டம்

தா்மபுரி, ஜன.14: வத்தல்மலையில் சுற்றுலாத் துறையின் சார்பில், சுற்றுலா பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார். இவ்விழாவில், பொதுமக்கள் பங்கேற்புடன் கிராமத்தை தூய்மைப்படுத்தி கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், சிறுவர்களுக்கான ஓட்டப்பந்தயம் மற்றும் உறியடித்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது. முன்னதாக வத்தல்மலை கிராம பொதுமக்களுடன் இணைந்து கலெக்டர் பொங்கல் வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் கதிரேசன், டிஆர்ஓ பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தாசில்தார் ஜெயசெல்வம், பிடிஓ.,க்கள் சத்யா, அனந்தராம விஜயரங்கன், ஊராட்சி மன்றத் தலைவர் தங்கராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post சுற்றுலா பொங்கல் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: