அரசு போக்குவரத்து கழகங்களில் முன்பதிவு இருக்கைகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது

சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களில் முதன்முறையாக ஆன்லைன் முன்பதிவுக்கான பேருந்து இருக்கைகளின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது என போக்குவரத்து துறை செயலாளர் பணீந்தர ரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவு:
அரசு போக்குவரத்து கழகங்களில் முதன்முறையாக ஆன்லைன் முன்பதிவுக்கான பேருந்து இருக்கைகளின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இதுவரை 8000க்கும் குறைவாகவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகங்கள் பயணங்களை சிறப்பாக திட்டமிடுவதற்காக, ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விரைவாக டிக்கெட் புக்கிங் செய்ய டிஎன்எஸ்டிசியின் ஆப்பை டவுன்லோடு செய்து பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post அரசு போக்குவரத்து கழகங்களில் முன்பதிவு இருக்கைகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது appeared first on Dinakaran.

Related Stories: