வரும் 18ல் ஆஜராக கெஜ்ரிவாலுக்கு ஈ.டி. 4வது முறையாக சம்மன்

புதுடெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலிடமும் விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. இதுவரை 3 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில், 4வது முறையாக வரும் 18ம் தேதி நேரில் ஆஜராக கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை நேற்று சம்மன் அனுப்பி உள்ளது.

The post வரும் 18ல் ஆஜராக கெஜ்ரிவாலுக்கு ஈ.டி. 4வது முறையாக சம்மன் appeared first on Dinakaran.

Related Stories: