இதனால், கேட்டை கேட்கீப்பர், இயந்திரம் மூலம் ஏற்றி இறக்க முடியாது என்பதால், கேட்டை சங்கிலி மூலம் பிணைத்து பூட்டினார். ரயில்கள் வரும்போது, அவசர அவசரமாக ஏற்றி இறக்க முடியாது, என்பதால், கேட் பூட்டப்பட்டு, அதில் நில் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மேலும், அவ்வழியாக வந்த இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால், காலையில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மிகவும் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல், பல கி.மீ சுற்றி சென்று அவதியடைந்தனர்.
The post பார்வதிபுரத்தில் லோடு ஆட்டோ மோதி ரயில்வே கேட் சேதம்: சுற்றி செல்லும் வாகன ஓட்டிகள் appeared first on Dinakaran.