மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ் 26 தொகுதிகளையும், சிவசேனா 23 தொகுதிகளையும் ஒதுக்க கேட்கிறது. தேசியவாத காங்கிரஸ் கருத்து வெளியே தெரிவிக்கப்படவில்லை. ஜனவரி 14 அல்லது 15ம் தேதி சோனியா, சரத்பவார், உத்தவ் தாக்கரே தொகுதி பங்கீட்டை இறுதி செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், உபியில் உள்ள 80 தொகுதிகளில் பங்கீடு செய்வது குறித்து பேச்சுவார்த்தை தொடங்கியது. சமாஜ்வாடி கட்சி சார்பில் ராம்கோபால்யாதவ், ஜாவத் அலி ஆகியோர் பங்கேற்றனர். வரும் 12ம் தேதி மீண்டும் பேச்சு நடத்தி தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
* கார்கே இன்று அவசர ஆலோசனை
இந்தியா கூட்டணியில் ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே இன்று டெல்லியில் அவசர ஆலோசனை நடத்துகிறார். ஜன.15ம் தேதிக்குள் இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.
The post இந்தியா கூட்டணியில் உபி, மகாராஷ்டிராவில் தொகுதி பங்கீடு பேச்சு appeared first on Dinakaran.