சென்னை: இந்தாண்டின் ‘சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா’ வரும் 13ம் தேதி முதல் 17ம் தேதி வரை சென்னையின் பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ளது. 1500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இவ்விழாவில் பங்கேற்று மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்த உள்ளனர். இதன் தொடக்கவிழா தீவுத்திடலில் நடக்கும் என அறிவித்துள்ளனர்.