திருச்செந்தூருக்கு பாதயாத்திரை வந்த பக்தர் விபத்தில் பலி

தூத்துக்குடி, ஜன. 6: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா நல்லமுத்தாள்பட்டி, காலனி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் செந்தில் (43). இவரும், இதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் ராமமூர்த்தி (45) என்பவரும் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வந்தனர். ஓட்டப்பிடாரம் அருகே வாலசமுத்திரம் மெயின்ரோட்டில் 2 பேரும் நேற்று அதிகாலையில் நடந்து வரும்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் செந்தில் படுகாயமடைந்தார். ராமூர்த்தி லேசான காயமடைந்தார்.இதையடுத்து இருவரும் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செந்தில் இறந்தார். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post திருச்செந்தூருக்கு பாதயாத்திரை வந்த பக்தர் விபத்தில் பலி appeared first on Dinakaran.

Related Stories: