முன்னாள் அமைச்சர் மீது மேலும் ஒரு வழக்கு

கோட்டா: ராஜஸ்தானில் அசோக் கெலாட் முதல்வராக இருந்த போது சுரங்க அமைச்சராக இருந்த பிரமோத் ஜெயின் பெயரில் சட்ட விரோதமாக மணல் திருடியதாக பாஜ வார்டு கவுன்சிலர் புகார் அளித்தார். இதன் மூலம் அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 5 பேர் மீது கடந்த 1ம் தேதி வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில், மோசடி, சதி குற்றம் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் பிரமோத் ஜெயின் மீது பாரன் நகர போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post முன்னாள் அமைச்சர் மீது மேலும் ஒரு வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: