இதுகுறித்து என்னிடம் வாய்மொழியாகவும் எழுத்துப்பூர்வமாகவும் (26.09.2019 அன்று வாட்ஸ்அப்பில்) மஹுவா மொய்த்ரா தெரிவித்தார். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், தனது சமூக வலைதள பக்கத்தில் கிண்டலாக பதிலளித்த மஹுவா மொய்த்ரா, அடுத்த சில நிமிடங்களில் அந்த பதிவை நீக்கினார். முன்னதாக அதானி குழுமம் தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் இருந்து பெரும் தொகையை லஞ்சமாக மஹுவா மொய்த்ரா பெற்றதாக கூறப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக மக்களவை நெறிமுறைக் குழு முன்பாக, பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் ஆகியோர் ஆஜராகி, மொய்த்ராவுக்கு எதிராக வாக்குமூலம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post எம்பி பதவியை இழந்த நிலையில் மாஜி காதலனை கண்காணித்தாரா?.. புதிய சர்ச்சையில் மஹுவா மொய்த்ரா appeared first on Dinakaran.