அந்த வகையில் மஷ்ரஃபியாவில் இருக்கும் ஹமாஸ் அலுவலகம் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் துணைத் தலைவர் சலே அல்-அரூரி, அல்-கஸ்ஸாம் கமாண்டர்கள் சமீர் ஃபண்டி, அசாம் அல்-அக்ரா ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பாலஸ்தீன அமைப்புகள் மட்டுமின்றி ஹிஸ்புல்லா, ஹவுதி, ஈரான் ஆகியன எச்சரித்துள்ளன.
ஈரான் வெளியிட்ட அறிக்கையில், ‘எதிர்வினைக்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தயாராக இருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளது. ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா வெளியிட்ட அறிக்கையில், ‘லெபனான் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் கடுமையான எதிர் விளைவுகள் இருக்கும்’ என்றார்.
The post லெபனான் நாட்டில் பதுங்கியிருந்த ஹமாஸ் மூத்த தலைவர் படுகொலை: இஸ்ரேல் படைகளுக்கு ஈரான் எச்சரிக்கை appeared first on Dinakaran.