பொங்கல் தொகுப்புடன் ரொக்கத்தொகை வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்: அமைச்சர் உதயநிதி

சென்னை : கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை வழங்க நாளை பிரதமரை தாம் சந்திப்பதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “பொங்கல் தொகுப்புடன் ரொக்கத்தொகை வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். கேலோ இந்தியா நிகழ்வுக்கு அழைப்பிதழ் வழங்க நாளை பிரதமரை சந்திக்கிறேன். அப்போது தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரண நிதி பெறுவது குறித்தும் கோரிக்கை வைக்கப்படும்.இளைஞர் அணி மாநாடு தேதி குறித்து ஆலோசித்து ஓரிரு நாட்களில் தேதி அறிவிக்கப்படும்.” இவ்வாறு தெரிவித்தார்.

The post பொங்கல் தொகுப்புடன் ரொக்கத்தொகை வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்: அமைச்சர் உதயநிதி appeared first on Dinakaran.

Related Stories: