பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியில் மக்களால் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட 10 ஆண்டுகால அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை மறந்துவிட்டு 50 ஆண்டுக்கு முந்தைய எமர்ஜென்சியை பிரதமர் மோடி நினைவூட்டுவதாக அவர் பதிலடி கொடுத்துள்ளார். மக்கள் இம்முறை மோடிக்கு எதிராக வாக்களித்துள்ள போதும் அவர் பிரதமராக ஆகிவிட்டதாக கூறியுள்ள கார்கே, மோடி இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மக்களுக்கு தேவை ஆக்கப்பூர்வமான திட்டங்களே தவிர பிரதமர் வெற்று முழக்கங்கள் அல்ல என்றும் கார்கே குறிப்பிட்டுள்ளார்.
The post “மக்களுக்குத் தேவை ஆக்கபூர்வமான திட்டங்கள் – வெற்று பேச்சு அல்ல” : பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே பதிலடி appeared first on Dinakaran.