தேனி நகராட்சி பகுதியில் இன்று, நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

தேனி, ஜன.3: தேனி நகராட்சி பகுதியில் இன்றும், நாளையும் குடிநீர் விநியோகம் இருக்காது என தேனி அல்லிநகரம் நகராட்சி தெரிவித்துள்ளது. தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர்பாஷா விடுத்துள்ள அறிக்கை : தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு சொந்தமான வைகை அணை சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தேனி நகர் பகுதிக்கு குடிநீர் கொண்டு வரும் பிரதான குழாய் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தின் உள்ளே உடைப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த உடைப்பு சரிசெய்யும் பணி நடக்க உள்ளதால், தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகளில் இன்றும் நாளையும் என இரண்டு நாட்கள் மட்டும் குடிநீர் விநியோகப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர்பாஷா தெரிவித்துள்ளார்.

The post தேனி நகராட்சி பகுதியில் இன்று, நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: