தொடர்ந்து கிஷோரின் உடல் சின்ன வீராம்பட்டினம் கடற்கரையிலும், மோகனா உடல் வீராம்பட்டினம் கடற்கரையிலும் நேற்று மாலை கரை ஒதுங்கின. மீட்கப்பட்ட 3 உடல்களும் பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு பிரேத பரிசோதனை நடத்தி பெற்றோரிடம் மாணவிகள் மற்றும் டிப்ளமோ கேட்டரிங் மாணவர் கிஷோரின் உடல் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இறுதி சடங்கு நடைபெற்றது. இதில், ஒரே வீட்டில் 2 மாணவிகள் பலியான நிலையில் நெல்லித்தோப்பு பகுதி சோகத்தில் மூழ்கியது.
இதனிடையே மாயமான நவீனை தேடும் பணி தொடர்ந்து 3வது நாளாக இன்று நடந்தது. இந்நிலையில் அவரது உடல் இன்று சின்னவீராம்பட்டினம் ஈடன் பீச் அருகே கரை ஒதுங்கியதாக ஒதியஞ்சாலை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அரியாங்குப்பம் போலீசாரின் உதவியுடன் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
The post புத்தாண்டு கொண்டாட்டத்தில் விபரீதம்; புதுவையில் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட 4 மாணவர்கள் உடல் மீட்பு appeared first on Dinakaran.