முத்துப்பேட்டை கல்கேணி குளக்கரையை உயர்த்தி தர வேண்டும்

 

முத்துப்பேட்டை, டிச. 31: முத்துப்பேட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை 1 சார்பில் கிளை தலைவர் முஹம்மது அலி ஜின்னா தலைமையில் தெருமுனை பிரசாரம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் அப்துர் ரஹ்மான், பிறர் நலம் நாடுவோம் எனுஃப் கல்வியின் அவசியம், இர்பான் குர்ஆனின் சிறப்பு என்ற தலைப்புகளில் பேசினார்கள். இதில் மழை பெய்யும் காலங்களில் கல்கேணி குளத்தெருவில் உள்ள கல்கேணி குளம் நிரம்பி விடுகிறது. அப்போது அங்கிருக்கும் தண்ணீர் அருகில் சாலை முழுவதும் புகுந்து மக்கள் பயன்படுத்துவதற்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே கல்கேணி குளத்தின் கரையை உயர்த்தி தார்சாலை அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் சுஜாவுதீன் நன்றி கூறினார்.

The post முத்துப்பேட்டை கல்கேணி குளக்கரையை உயர்த்தி தர வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: