ஜெகன் கட்சி எம்எல்ஏ சர்மிளாவுடன் இணைந்தார்: ஆந்திர அரசியலில் பரபரப்பு

திருமலை: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரி சட்டமன்ற தொகுதியில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக ஆள ராமகிருஷ்ணா உள்ளார். இவர் கடந்த வாரத்தில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை சட்டப்ேபரவை செயலாளரிடம் வழங்கினார். ஆனால் அவரது ராஜினாமா கடிதத்தை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் ஏற்கவில்லை. இந்நிலையில் தனது அரசியல் எதிர்காலம் குறித்து ஆள ராமகிருஷ்ணா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: எனது பயணம் ஒய்.எஸ்.ராஜசேகரின் பாதை தான். எனவே எனது அரசியல் பயணத்தில் ஒய்.எஸ்.சர்மிளா ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட்டால் அவருடன் நானும் இணைந்து செயல்படுவேன். ஷர்மிளா என்ன முடிவு எடுத்தாலும் அவருடன் இருப்பேன். எனது எம்எல்ஏ பதவி ராஜினாமாவை ஏற்பது அவர்கள் கையில் உள்ளது. இவ்வாறு கூறினார்.

 

The post ஜெகன் கட்சி எம்எல்ஏ சர்மிளாவுடன் இணைந்தார்: ஆந்திர அரசியலில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: