ஒன்றிய அரசின் விதிகள், சட்ட திட்டங்களை பின்பற்றித்தான் தன்னால் நடக்க முடியும் எனவும் கறாராக தெரிவித்தார். இதனால் தலைமை செயலாளர் மீது முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருந்து வந்தனர். இது போன்ற சூழலில், முதல்வருக்கு தெரியாமல் புதிதாக நியமிக்கப்பட்ட செயலருக்கு இலாகா ஒதுக்கியதாக புகார் எழுந்தது. இந்த சம்பவத்துக்கு பிறகு நாளுக்கு நாள் அரசுக்கும், தலைமை செயலாளருக்கும் மோதல் அதிகரித்து வந்தது. இதனால் புதுச்சேரி தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று ஒன்றிய உள்துறைக்கு அமைச்சகத்திற்கு ராஜீவ் வர்மா கடிதம் எழுதியதாக கூறப்பட்டது. இந்தநிலையில் ராஜீவ் வர்மா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய தலைமை செயலாளராக டெல்லியை சேர்ந்த சஞ்சீவ்குமார் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுதொடர்பாக அரசு சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
The post புதுச்சேரி தலைமை செயலாளர் மாற்றம்? appeared first on Dinakaran.