கோயிலில் திருட்டு

தேவதானப்பட்டி, டிச. 28: தேவதானப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சண்முகவேல்(56). இவர் இவர்களது பங்காளிகள் கோவில் மதிப்பனூர் அங்காள அய்யனார் கோயில் பூசாரியாக உள்ளார். இவர் வழக்கம் போல கடந்த 3 நாட்களுக்கு முன் காலை கோயிலில் பூஜை செய்வதற்காக கதவை திறந்தார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது கோயிலில் இருந்த உண்டியல் பணம் மற்றும் தங்க காசுகள், குத்து விளக்குகள் மணி உள்ளிட்ட பொருட்கள் என ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோயிலில் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: