திமுக இளைஞரணி மாநாட்டிற்கு தஞ்சாவூர் தெற்கு மாவட்ட மருத்துவ அணி ரூ.50,000 நன்கொடை

பேராவூரணி, டிச.28: சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாட்டு செலவிற்காக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பாக ரூ.50 ஆயிரம் நன்கொடை வழங்கப்பட்டது. தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அண்ணாதுரையிடம் ரூ.50 ஆயிரத்திற்கான வரைவோலையை மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் சவுந்தரராஜன் வழங்கினார். நிகழ்ச்சியில் எம்எல்ஏ அசோக்குமார், மருத்துவ அணி மாவட்ட துணை அமைப்பாளர் அரவிந்த், மாவட்ட துணை தலைவர் அமுதா, பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர் சாந்தபிரபு, பேராவூரணி சட்டமன்றத் தொகுதி துணை அமைப்பாளர்கள் ராஜூ, பாலமுருகன், லெனின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post திமுக இளைஞரணி மாநாட்டிற்கு தஞ்சாவூர் தெற்கு மாவட்ட மருத்துவ அணி ரூ.50,000 நன்கொடை appeared first on Dinakaran.

Related Stories: