மக்கள் அனைத்தையும் இழந்து ஆதரவற்ற நிலையில் தவித்துக் கொண்டிருக்கும்போது தமிழ்நாடு அரசின் நிவாரண பணிகள் மற்றும் வழங்கி வரும் நிவாரணத் தொகைகள் ஓரளவு ஆறுதலை தருகின்றன. ஒன்றிய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட நிவாரணம் வழங்கவில்லை என்பது பழிவாங்கும் போக்கை காட்டுகிறது. பேரிடர் நிவாரண நிதியாக தமிழக அரசு கேட்ட ரூ.21 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்கிட வற்புறுத்தி 2024 ஜனவரி 3ம் தேதி சென்னையில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் செயல்படும் சாஸ்திரி பவனை மார்க்சிஸ்ட் சார்பில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post பேரிடர் நிவாரண நிதியை உடனே வழங்க ஒன்றிய அரசை வலியுறுத்தி ஜன.3ல் சாஸ்திரிபவன் முற்றுகை appeared first on Dinakaran.