இந்நிலையில், கடும் பனிமூட்டத்தால் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் டெல்லியில் இருந்து புறப்படும், டெல்லிக்கு வரும் 30 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. கடும் பனிப்பொழிவு காரணமாக ஓடுபாதை கண்ணுக்கு தெரியாததால் 2வது நாளாக டெல்லியில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் இன்றும் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவால் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸானது. பனிப்பொழிவு அடர்த்தியாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
The post மூடுபனி எதிரொலி: வடமாநிலங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை.. டெல்லியில் இருந்து புறப்படும் 30 விமானங்கள் தாமதமாக இயக்கம்..!! appeared first on Dinakaran.