திருமண சடங்கு நடத்தாமல் மேகாலயாவில் ஒரே பாலின ஜோடிக்கு ஆசிர்வாதம்: கத்தோலிக்க பேராயர் அனுமதி

ஷில்லாங்: மேகாலயாவில் ஒரே பாலின ஜோடிக்கு கத்தோலிக்க பாதிரியார்கள் ஆசிர்வாதம் வழங்கலாம் என்று என்று கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது.  சமீபத்தில் வெளியான வாடிகன் கொள்கையில் மாற்றங்கள் என்ற புதிய ஆவணத்தில், ஒரே பாலின ஜோடிக்கு ஆசிர்வாதம் வழங்குவதற்கு போப் பிரான்சிஸ் முறைப்படி அனுமதி அளித்துள்ளதாக குறிப்பிப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து மேகாலயாவில் ஷில்லாங் கத்தோலிக்க பேராயர் விக்டர் லிங்டோ வௌியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ கத்தோலிக்க பாதிரியார்கள் ஓரே பாலின ஜோடி இனிமேல் ஆசிர்வதிக்க முடியும். ஆனால் திருமண சடங்குகளை ஒத்த திருச்சபையின் எந்த சடங்குகளும் இல்லாமல் ஆசிர்வாதம் மட்டும் வழங்கலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post திருமண சடங்கு நடத்தாமல் மேகாலயாவில் ஒரே பாலின ஜோடிக்கு ஆசிர்வாதம்: கத்தோலிக்க பேராயர் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: