டிரோன் ஷோ, எல்இடி பலூனுடன் கோவை வாலாங்குளத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

 

கோவை, டிச. 22: கோவை ஸ்மார்ட் சிட்டி சார்பில் வாலாங்குளத்தில் டிரோன் ஷோ, எல்இடி பலூன், டிஜே மியூசிக் உடன் வரும் புத்தாண்டை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் குமார் நிருபர்களிடம் கூறியதாவது: புத்தாண்டையொட்டி கோவை ஸ்மார்ட் சிட்டியுடன் இணைந்து, மதுவிலக்கு இல்லாத புத்தாண்டு வாலாங்குளத்தில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் 31ம் தேதி மாலை 6.30 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இதில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம். அனைவரையும் கவரும் வகையில் டி.ஜே மியூசிக், மேடை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. தவிர, 300 டிரோன்கள் பயன்படுத்தி டிரோன் ஷோ முதல் முறையாக நடத்தப்பட உள்ளது. இது 10 முதல் 13 நிமிடங்கள் நீடிக்கும்.

தொடர்ந்து, 15 நிமிடங்களுக்கு லேசராண்ட் எல்இடி விளக்கு காட்சி நடைபெறும். வாலாங்குளத்தில் மிதக்கும் வகையில் 20 ஆயிரம் எல்இடி பலூன்கள் மற்றும் ஸ்கை லேட்டர்ன்கள் நடத்தப்பட உள்ளது. மைதானத்திற்குள் மதுபானம் மற்றும் போதை பொருட்களை எடுத்து செல்வதை தவிர்க்க அனைத்து பைகளும் முழுமையாக சோதனை செய்யப்படும். கோவை மாநகர போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். விழாவில், மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், போலீஸ் கமிஷனர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். அனைவருக்கும் அனுமதி இலவசம். இவ்வாறு அவர் கூறினார்.

The post டிரோன் ஷோ, எல்இடி பலூனுடன் கோவை வாலாங்குளத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: