திருவையாறு அருகே கால்நடை மருத்துவ முகாம்

திருவையாறு, டிச.22: திருவையாறு அடுத்த கல்யாணபுரம் 2ம் சேத்தி வீரசிங்கம்பேட்டை கிராமத்தில் கண்டியூர் கால்நடை மருத்தகம் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் கால்நடை மருந்தக டாக்டர் அருள்வேந்தன் தலைமையில் டாக்டர்கள் பாலமுருகன், மோகன், கால்நடை ஆய்வாளர் மஞ்சுளா, கால்நடை பராமரிப்பாளர் இளங்கோவன் மற்றும் குழுவினர் 500 கால்நடைகளுக்கு குடற்புழுநீக்கம், மலட்டுதன்மை நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல் உள்ளிட்ட சிகிச்சை அளித்து தடுப்பு ஊசி போடப்பட்டது. மேலும் சிறந்த கிடேரிகன்றுகள் மற்றும் சிறந்த விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முகாமில், மண்டல இணை இயக்குனர் தமிழ்ச்செல்வம், துணை இயக்குனர் சுப்பையன், தஞ்சை உதவி இயக்குனர் அன்புச்செழியன், ஊராட்சிமன்றத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post திருவையாறு அருகே கால்நடை மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: