ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பதவியேற்பின்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஒன்றிய அரசை கண்டித்து பேசியதால் பரபரப்பு..!!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பதவியேற்பின்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஒன்றிய அரசை கண்டித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார். ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டி தலைவரும் எம்.எல்.ஏ.வுமான கோவிந்த சிங்கும் நேற்று பதவியேற்றார். பதியேற்ற பிறகு, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து பேசினார்.

எம்.பி.க்கள் சஸ்பெண்டுக்கு ராஜஸ்தான் சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்காலிக சபாநாயகர் காலிச்சரண் தடுக்க முயன்றும் பேச்சை நிறுத்தாமல் தனது கண்டனத்தை கோவிந்த் சிங் பதிவுசெய்தார். எம்.பி.க்கள் சஸ்பெண்டை கண்டித்து கருப்பு பட்டை கட்டி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜஸ்தான் பேரவைக்கு வந்தனர்.

The post ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பதவியேற்பின்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஒன்றிய அரசை கண்டித்து பேசியதால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: