இதனால் இருவரையும் எச்சரித்ததோடு மனைவியை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நடராஜ், துர்கேஷை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்கு சோனியாவும் சம்மதிக்க, நேற்று அதிகாலை 1.30 மணி அளவில், நடராஜ், தனது சித்தப்பா மகன் மது (22) என்பவருடன், துர்கேஷின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது சோனியா கதவை திறந்து வைத்ததால் வீட்டுக்குள் நுழைந்து தூங்கிகொண்டிருந்த துர்கேசை, அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். துர்கேஷின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடராஜ் மற்றும் மதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தகாத உறவுக்கு இடையூறு காதலியின் கணவரை வெட்டி கொன்ற காதலன்: ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மனைவி appeared first on Dinakaran.