இந்நிலையில் இன்று மார்கழி மாதம் பிறந்ததையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து புதிய வஸ்திரங்கள், அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள், மாலைகள், தாம்பூலம், மங்கலப் பொருட்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் கொண்டுசெல்லப்பட்டன.மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் பக்தர்கள் ஊர்வலமாக நேற்று இரவு திருவானைக்கோயிலுக்கு எடுத்து சென்றனர். திருவானைக்கோயில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் கோயில் பண்டிதர்கள் அம்பாள் சன்னதி அருகே அவர்களை வரவேற்று சீர்வரிசை பொருட்களை பெற்றுக்கொண்டனர்.இந்த உணவுப் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் நிவேதனத்துடன் இன்று காலை மார்கழி முதல்நாள் பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
The post இன்று மார்கழி முதல்நாள் பூஜை திருவானைக்காவல் அம்மனுக்கு ஸ்ரீரங்கத்திலிருந்து சீர்வரிசை appeared first on Dinakaran.