மாவட்ட மைய நூலகத்தில் மூத்தோர் முற்றோம் நிகழ்ச்சி

திருச்சி, டிச.17: திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் மூத்தோர் முற்றோம் நிகழ்ச்சி டிச.20ம் தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் “பெற்ற ஞானம்’’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இதில் மூத்தோர் மட்டுமின்றி அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று முதல் நிலை நூலகர் தனலெட்சுமி தெரிவித்துள்ளார்.

The post மாவட்ட மைய நூலகத்தில் மூத்தோர் முற்றோம் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: