அரசு மருத்துவமனைகளில் புதிதாக ஏற்பட்டுள்ள காலியிடங்களையும் அண்மையில் நடத்தப்பட்ட போட்டித் தேர்வின் அடிப்படையில் நிரப்புவது தான் சரியாக இருக்கும். அது தான் தமிழ்நாட்டு மக்களுக்கும், மருத்துவர்களுக்கும் பயன் அளிக்கும். எனவே, கடந்த ஆண்டு அக்டோபர் 11ம் நாள் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள அரசு மருத்துவர்கள் எண்ணிக்கையை 1752 ஆக உயர்த்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறி உள்ளார்.
The post அரசு மருத்துவர்கள் நியமனம் காலிப்பணியிடங்களை 1,752 ஆக உயர்த்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.