இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 10ம்தேதி, ஊரில் மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. அப்போது முனியப்பன் சாமி கும்பிட கோயிலுக்கு சென்றார். அங்கு வந்த ஈஸ்வரனுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ஈஸ்வரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், முனியப்பனை சரமாரியாக குத்திக் கொலை செய்தார்.இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து, ஈஸ்வரனை கைது செய்தனர்.தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் நீதிபதி மோனிகா நேற்று தீர்ப்பளித்தார். முனியப்பனை கொலை செய்த ஈஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
The post மனைவியுடன் பேசிய உறவினரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.