இந்த நிலையில், பாதுகாப்பு குறைபாடு விவகாரத்தில் மக்களவை பாதுகாவலர்கள் 7 பேரை சஸ்பெண்ட் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டது. மேலும் பாதுகாப்பு குறைபாடு காரணமாக இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஷூக்களில் வண்ணக்குப்பிகளை இளைஞர்கள் நேற்று மறைத்து எடுத்து வந்ததை அடுத்து இன்று எம்பிக்களின் காலணிகள் சோதனை செய்யப்பட்டது. இதையடுத்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடிக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக்கோரி முழக்கமிட்டனர். இதனிடையே பாதுகாப்பு குறைபாடு பிரச்னையை அரசியலாக்காமல் அனைவரும் ஒன்றுபட்டு இதை அணுக வேண்டும். ஒற்றுமையாக கண்டிக்க வேண்டும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் விளக்கம் அளித்தார். அமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுப்பு தெரிவித்து, அமித்ஷா விளக்கமளிக்க வலியுறுத்தி சபாநாயகரை முற்றுகையிட்டு எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கமிட்டனர். சபாநாயகர் பலமுறை கேட்டுக் கொண்டும் உறுப்பினர்களின் அமளி நீடித்ததால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
The post பாதுகாப்பு குறைபாடு விவகாரம் : மக்களவை பாதுகாவலர்கள் 7 பேர் சஸ்பெண்ட்; அமித்ஷா பதவி விலக எதிர்க்கட்சிகள் முழக்கம்!! appeared first on Dinakaran.