சென்னையில் நடந்த மழை வெள்ள நிவாரண பணிகளை பொதுமக்கள் பாராட்டி உள்ளனர். நேற்று பாதிக்கப்பட்ட இடங்களை மத்தியக்குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்களும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி பாராட்டி உள்ளனர். இதனால் குறை சொல்பவர்கள் அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும். குறை சொல்வது நிவாரண பணிகளில் ஈடுபட்ட பல ஆயிரம் தொழிலாளர்களை கொச்சைப்படுத்துவது போன்றதாகும். வெள்ளம் பாதித்த மக்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவிகள் செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post நிவாரண பணிகளை குறைசொல்வது, பணியாற்றிய பல ஆயிரம் தொழிலாளர்களை கொச்சைப்படுத்துவதற்கு சமம்: சபாநாயகர் அப்பாவு கண்டனம் appeared first on Dinakaran.