இந்நிலையில், கடந்த 10ம் தேதி திருவொற்றியூர்- மணலி செல்லும் சாலையில் புதிதாக கட்டப்பட்ட கால்வாய் மேம்பாலம் அருகே மழைநீர் தேங்கியுள்ள குட்டையில் செல்வராஜ் இறந்த நிலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்த திருவொற்றியூர் போலீசார் விரைந்து வந்து செல்வராஜின் உடலை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கடந்த 6 ம் தேதி கனமழையின் காரணமாக திருவொற்றியூர்-மணலி சாலையில் இடுப்பளவிற்கு மழைநீர் வெள்ளம் ஓடியது. மழைநீரில் நடந்து செல்லும் போது செல்வராஜ் சிக்கி மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருவொற்றியூரில் மழைநீர் வெள்ளத்தில் மூழ்கியவர் உடல்மீட்பு appeared first on Dinakaran.