இந்த மாவட்டங்களில் கடும் வெள்ள பாதிப்பு மற்றும் தண்ணீர் தேங்கியுள்ளதால், புயல் பாதித்த பகுதிகளில் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கண்காணிக்க துணை சுகாதாரத்துறை இயக்குநர்கள் மற்றும் கூடுதல் சுகாதாரத்துறை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மருத்துவ முகாம்கள், வெக்டார் கட்டுப்பாடு, குளோரினேஷன் மற்றும் பிற சுகாதார நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். இந்த குழுக்கள் மூலம் எடுக்கப்படும் பரிசோதனை முடிவுகளை தினசரி அறிக்கையாக பொது சுகாதார இயக்குனரகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இயக்குநர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
The post புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார நடவடிக்கைக்கு 300 மருத்துவ குழுக்கள்: பொது சுகாதாரத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.
