இது மும்பை-அகமதாபாத் இடையே சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் ஐ.சி.எப்.பில் 2வது ரயில் தயாராகி நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த ரயில் வடகிழக்கு அல்லது வடக்கு மத்திய ரயில்வே மண்டலத்திற்கு வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த புதிய ரயிலுக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. எனினும் வந்தே பாரத் ரயில் போன்று உள்ள இந்த ரயிலுக்கு அம்ருத் பாரத் என்று வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் மொத்தம் 22 பெட்டிகள் இருக்கும், எதிலும் குளிர்சாதன வசதி இருக்காது. முன்பதிவு இல்லாத பெட்டிகளும் இருக்கும். தற்போதுள்ள வந்தே பாரத் ரயிலில் இன்ஜின் ரயிலின் அடிப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் குளிர்சாதன வசதி இல்லாமல் தயாரிக்கப்படும் இந்த ரயிலில் முன்னும் பின்னும் இன்ஜின் இருக்கும். இதில் 12 தூங்கும் வசதியுடன் 2ம் வகுப்பு பெட்டிகள், உட்கார்ந்து பயணம் செய்யும் வகையில் 12 பொதுப்பெட்டி இருக்கும். இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post ஏசி இல்லாத வந்தே பாரத் ரயிலுக்கு அம்ருத் பாரத் என பெயர் வைக்க திட்டம் appeared first on Dinakaran.