7,500 பேர் எழுதுகிறார்கள் நாகப்பட்டினத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம்

நாகப்பட்டினம்: தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி திருமருகல் வட்டார பொதுக்குழு கூட்டம் நடந்தது. வட்டார தலைவர் குருநாதன் தலைமை வகித்தார். செயலாளர் ஆண்ட்ரூஸ் வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பால்மோகன், திருமருகல் வட்டார செயற்குழு உறுப்பினர்கள் மனோகரன், பாலகிருஷ்ணன், மகளிரணி தலைவர் ராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். வட்டார பொருளாளர் ஐயப்பன் நன்றி கூறினார்.

The post 7,500 பேர் எழுதுகிறார்கள் நாகப்பட்டினத்தில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: