மகுவா மொய்த்ரா பதவி பறிப்பு: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் பதவியை அரசியல் காரணங்களுக்காக பறிப்பது தவறு: திருமாவளவன் கண்டனம்

சென்னை: பிரதமர்-அதானி உறவை அம்பலப்படுத்திய மகுவா மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிப்பு மோசமான முன்னுதாரணம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியதாக புகாரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மகுவா மொய்த்ரா எம்பி பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதுதொடர்பாக மகுவா மொய்த்ராவிடம் விசாரணை நடத்திய நாடாளுமன்ற நன்னடத்தை குழு தனது அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்தது. இதையடுத்து மகுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை சபாநாயகர் மக்களவையில் நிறைவேற்றினார். சபாநாயகரின் நடவடிக்கையை கண்டித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து மகுவா மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிப்புக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜகவின் செயலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் கூறியதாவது; பிரதமர்-அதானி உறவை அம்பலப்படுத்திய மகுவா மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிப்பு மோசமான முன்னுதாரணம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் பதவியை அரசியல் காரணங்களுக்காக பறிப்பது தவறான செயலாகும். டிசம்பர் 29-ல் விசிக சார்பில் வெல்லும் ஜனநாயகம் மாநாடு திருச்சி சிறுகலூரில் நடைபெறும். அம்மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியா கூட்டணி தலைவர்கள் கார்கே, டி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று அவர் தெரிவித்தார்.

The post மகுவா மொய்த்ரா பதவி பறிப்பு: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் பதவியை அரசியல் காரணங்களுக்காக பறிப்பது தவறு: திருமாவளவன் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: