இவ்விசயத்தில் பல நாடுகள் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்து வருகின்றன என்பது எனக்கு தெரியும். ஆனால் அது சாத்தியமாகாது. உண்மையைச் சொல்வதென்றால், இந்திய மக்களின் நலன்களைப் பாதுகாக்க, எவ்வளவு கடுமையான நிலைப்பாட்டையும் மோடி எடுத்து வருவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது’ என்று கூறினார். ரஷ்யாவில் இருந்து இந்தியாவிற்கு மாதம் 60 மில்லியன் பீப்பாய் அளவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி, ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஏற்றுமதியில் கால் பங்கை இந்தியா வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The post கச்சா எண்ணெய் விவகாரத்தில் மோடியை மிரட்டவோ கட்டாயப்படுத்தவோ முடியாது: ரஷ்ய அதிபர் புடின் பேச்சு appeared first on Dinakaran.