கடலூர்: மங்கலம்பேட்டையில் குட்கா கடத்தலுக்கு உடந்தையாக இருந்த வழக்கில் காவலர் பூவராகவன் கைது செய்யப்பட்டார். குட்கா கடத்தல் வழக்கில் கைதான மன்சூர் அலிகான் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.ரூ.75 ஆயிரம் மதிப்பு குட்காவிற்கு வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க ரூ.50,000 வாங்கியதாக கைதி வாக்குமூலம் அளித்தார்.