கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மூங்கில்பாடி செல்லும் சாலையில் தனியார் பள்ளியின் பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயங்களுடன் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் வட்டாட்சியர் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார்.