இந்நிலையில், அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட கடலோர காவல்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று படகில் இருந்த 11 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர். இருப்பினும் படகு முழுவதும் தீ பரவிய நிலையில் படகை விட்டுவிட்டு மீனவர்களை மட்டும் கரைக்கு அழைத்து வந்தனர். தீ பிடித்த படகு முற்றிலும் எரிந்து கடலில் மூழ்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர். கடற்படை அதிகாரிகள் சம்பவ நடந்த இடத்தில் இருந்ததால் 11 மீனவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டது. இல்லையெனில் அவர்களது நிலைமை கேள்விக்குறியாகி இருக்கும் என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
The post ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள வங்ககடலில் மீனவர்கள் சென்ற படகில் ஏற்பட்ட தீ: 11 மீனவர்கள் மீட்பு appeared first on Dinakaran.