இதனை தடுக்கும் வகையில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஆடை கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு பலகையை பெரியகோயில் நுழைவாயிலில் முன்பு வைக்கப்பட்டுள்ளது. அதில், ஆண்கள் வேட்டி சட்டை, பேண்ட் அணிந்தும், பெண்கள் புடவை, தாவணி துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் அணிந்து வர வேண்டும் என எழுதப்பட்டுள்ளது. இதுதவிர மற்ற ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அறிவிப்பு பலகையை கண்டவுடன் உடனே கடைக்கு சென்று பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை மற்றும் பெண்கள் புடவைகள் அணிந்து கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனைக்கண்ட சக பக்தர்கள் அவர்களை பாராட்டினர்.
The post தஞ்சாவூர் பெரியகோயிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு: வேட்டி சட்டை, புடவை, சுடிதாருக்கு மட்டும் அனுமதி appeared first on Dinakaran.